Tuesday, April 03, 2007

322. அனானிக்கு வந்த சந்தேகம் (அ) நான் கி.அ.அ.அனானியா ?

என் முந்தைய பதிவில் ஒரு 'அனானி', ஒரு சந்தேகத்தை, கீழே உள்ள பின்னூட்டம் வாயிலாக வெளியிட்டார். நண்பர் குழலிக்கும் இந்த டவுட் இருப்பதை அவரது பின்னூட்டத்தில் உள்ள ஸ்மைலி உணர்த்தியது :) அதனால் தான் இந்த விளக்கப் பதிவு!
***************************
பாலா,

வேண்டாம் விடுங்க.. உங்களுக்கு இந்த விளையாட்டு சரியா வெளையாட வரலை!

இப்படித்தான் ஒருத்தரு பயங்கர வெவரமா வெளையாடறேன்னுட்டு மனோகர் ஜோஷியாகி பல்லிளித்த
கதையை யாரும் மறக்கலை..

எந்த கருத்தா இருந்தா என்ன? உங்க பேருலயே எழுதுங்களேன்.

சரியான வாதம்/கருத்து வைச்சா நீர்வந்து செயல்ல காட்டி போர்டை கழட்டுவீரா?! அதாவது அந்த
போர்டு ஏன் அங்க இருக்குன்னு உமக்கு தெரியாது. மத்தவங்க கும்மியடிக்காம தெளிவா ஆக்கப்ப்பூர்வமா
எடுத்துச்சொன்னா உடனே நீங்க அந்த உலக உண்மைய புரிஞ்சுண்டு காரியத்துல இறங்கீரூவீர்! ஒரே
தமாசையா உம்மோட... "அவங்களுக்குத்தான் அறிவில்லை. கும்மி அடிக்கறாங்க. நீர் என்னத்த
கழட்டப்போறேன்னு சொல்லலையேன்னு" கேட்டா... மொதல்ல அவனை கக்கா போகச்சொல்லு. அப்பறம் நான் வந்து கழுவறேங்கறீர்! தெளிவா எழுதறதா நெனைச்சுண்டா மட்டும் போறாது. அதைப் வாசிச்சுட்டு மத்தவா கேள்வி கேட்டா பதில் சொல்ல வக்கிருக்கனும்.

// ""ஒண்ணு விட்டா"" நீ அத்திம்பேர் பையனா ?விட்டுட்டா போச்சு :)
//
ஆத்துல சொல்லிக் கொடுக்கலையா? இப்படியெல்லாம் கண்ட இடத்துல விடப்படாது ஓய்! பார்த்து... :)

********************************

கி.அ.அ.அ வின் "ஒண்ணு விட்டா" அத்திம்பேர் பையன் தம்பி,

நீங்க ஒங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அனானியா வந்து பிரில்லியண்ட்டா கேள்வி கேட்டிருந்தாலும், எனக்கு இந்த "விளையாட்டு" வரலைன்னு அங்கலாய்த்திருந்தாலும், உங்களுக்கு பதில் சொல்லத் தான் போறேன் :) இனிமேல், கொஞ்சம் 'சின்ன' புனைபெயரில் வந்தால் கூப்பிட வசதியாக இருக்கும் ;-)

தெளிவாச் சொல்றேன், இந்த பதிவை எழுதினது கி.அ.அ.அ. "நான் அவரில்லை". மேலும், 3 வருஷமா இங்க குப்பை கொட்டிக் கொண்டு இருக்கும் எனக்கு, வேறு ஒருவரின் பெயரில் எழுத வேண்டிய அவசியமில்லை! அப்படி செய்ய வேண்டுமென்று விரும்பினால், பார் டெண்டர், இரவுக் கழுகார், வி.சி போல ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு, உஷாரா செய்ற அளவுக்கு எனக்கு(ம்) புத்தி இருக்கு :)

என் பெயரிலேயே நெறைய விவாதங்களில் கலந்து கொண்டு, தீவிரமா கருத்துக்களை முன் வைத்து, சண்டையெல்லாம் போட்டவன் தான் நான்! கேட்டுப் பாருங்க ! எதுக்குக் கேட்கணும், ஒங்களுக்கே தெரியுமே :) மேலும், பாலபாரதி, லக்கிலுக் மற்றும் திருவிடம் ஒரு விஷயத்தை நேரடியாக எடுத்துச் சொல்ல எனக்கு என்ன பயம் வேண்டிக் கிடக்கு, இன்னொருத்தர் பேர்ல சொல்ற அளவுக்கு !!!! லாஜிக் உதைக்குதே, தம்பி :)

உங்க (மற்றும் இன்ன பிறரின்!) தெளிவுக்காகச் சொல்றேன், கி.அ.அ.அ அனுப்பற மேட்டர்ல சற்று காட்டமா இருக்குற சிலவற்றை எடிட் செய்து விட்டுத் தான் பதிப்பிக்கிறேன். என் வலைப்பதிவில் இடப்படுபவை should follow certain guidelines, I have set !

மேலும், கி.அ.அ.அ போல எனக்கு எழுத வராது !!!!! அவர் எழுத்துக்களை சுவீகரித்துக் கொள்ளும் அல்ப ஆசையும் எனக்கில்லை. அதன் மூலம், பிரபலம் அடைய வேண்டிய அவசியமுமில்லை. In fact, கி.அ.அ.அனானியிடம், ஒரு வலைப்பதிவு தொடங்குமாறு ஆரம்பத்திலேயே ஒரு மெயிலில் கூறியிருந்தேன். அவர் அதற்கு பதில் கூறவில்லை.

இன்னொரு விஷயம். எனது முந்தைய பதிவுக்கு (ஒரே நாளில்) 500 ஹிட்ஸ், கி.அ.அ.அ வின் தயவில் ! நான் எழுதும் பதிவுக்கு நார்மலா, 150-200 ஹிட்ஸ் தான் கிடைத்து வருகிறது. அதனால், அவரைப் போல் என்னால் எழுத முடியுமானால், எனக்கு மகிழ்ச்சியே :) Unfortunately, கி.அ.அ.அனானி, மாதத்திற்கு 1 அல்லது 2 மேட்டர் தான் மெயிலில் அனுப்புகிறார் !

கி.அ.அ.அனானியின் எழுத்து நடைக்கு பலரைப் போல் நானும் ரசிகன் ! நான் கூறியவற்றை நம்பறதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். இது தான் என் முதல் மற்றும் கடைசி விளக்கம், ஐயம் கொண்ட ஐயாக்களுக்கு ;-)
*****************************
இப்போது "ஒண்ணு விட்டா" அத்திம்பேர் பையன் தம்பி கேட்ட கேள்விக்கு, அதாவது
//
அண்ணே பாலா,

ஜல்லி கும்மி அடிக்கற ஆளுங்களை விடுங்க.

அந்த போர்டு அங்கே இருக்கது உங்களுக்கு ஓகே வா இல்லையா?

OK ன்னா இதோட நிறுத்திக்கறேன். இல்லைன்னா அதை கழட்டறதுக்கான உங்க முயற்சி கருத்து என்ன?
அதைப்பத்தி ஒரு வரியும் காணோம்!

//

என்னோட பதில் ! முந்தைய பதிவிலேயே, அங்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ அவர்களே பதில் சொல்வாருன்னு போட்டிருந்தேன்! நம்ம "அத்திம்பேர் பையன் தம்பி" என்னிடம் கேட்ட கேள்விக்கு, கி.அ.அ.அ சிறப்பாகவே, ஆக்கபூர்வமாகவே பதில் சொல்லியிருக்காரு. ஆனாப் பாருங்க, தம்பி நீங்க உடனே என் மேல் பாயறீங்க, "எனக்கு இந்த விளையாட்டு வரலை" அப்டின்னு!

அப்புறம், அந்த போர்ட் இருக்கறது எனக்கு ஓகேவான்னு ஒரு கேள்வி கேட்கறீங்க ! பதிவிலே தந்த 'எனது' டிஸ்கிலே, அது அகற்றப்பட வேண்டியது என்று தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கேன். அதற்கு "நாம்" முயற்சி எடுக்கணும் என்றும் கூறியிருக்கேன் !

அந்த போர்டை வச்சு ஜல்லியடிச்சவங்க கிட்ட, கி.அ.அ.அ. 2 கேள்விகள் கேட்டிருந்தாரு. அவங்க முதலில் பதில் தரட்டும். அவங்க முதலில் முயற்சி எடுக்கட்டும், அவங்களுக்கு உதவி செய்ய நிச்சயம் நானும் வருகிறேன். நான் விசாரித்ததில், ராமேஸ்வரத்துல உள்ள DC (Deputy collector) கிட்ட ஒரு புகார் கடிதம் முதலில் அளிக்க வேண்டும் என்று தெரிய வந்தது.

நியாயமா, "கி.அ.அ.அ வின் அத்திம்பேர் பையன் தம்பி" யான நீங்க போர்ட் படமெடுத்துப் போட்ட மற்றும் அது பற்றி "ஆய்ந்து" எழுதிய பதிவர்களிடம், "இந்த போர்டை எடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள் ? அது அங்கிருப்பது சம்மதமா?" என்று முதற்கண் கேள்வி கேட்டிருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம் !!!!!!

ரொம்ப போரடிச்சுட்டேனா ? Bye for now!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 322 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test comment :)

said...

பாலாஜி சார்,

நீங்க நான் இல்லை அப்படீன்னு விளக்குறதுக்கு ஒரு பதிவா?அதுல என்னுடைய எழுத்துக்கு ரசிகன்னு :) வேற...என்ன நக்கலா ?

இத்த்தோடா:)

கி.அ.அ.அனானி

enRenRum-anbudan.BALA said...

கி.அ.அ.அ.,

என்ன பண்றது ? என் தலையெழுத்து ;-)

said...

Nice post ;)))))

said...

மேலேயுள்ள கி.அ.அ.அனானி ஒரு போலி. ஒரு பேமானி. நான் தான் ஒரிஜினல் கி.அ.அ.அனானி.

இப்படிக்கு
ISO 9001, ISI தரச்சான்றுகள் பெற்றுள்ள
கி.அ.அ.அனானி

enRenRum-anbudan.BALA said...

//
மேலேயுள்ள கி.அ.அ.அனானி ஒரு போலி. ஒரு பேமானி. நான் தான் ஒரிஜினல் கி.அ.அ.அனானி.

இப்படிக்கு
ISO 9001, ISI தரச்சான்றுகள் பெற்றுள்ள
கி.அ.அ.அனானி
//
Shaking Head :))))))

said...

Excellent posting ;-)

enRenRum-anbudan.BALA said...

Test comment again ;-)

said...

பாலாஜி சார்,

நான் உங்களுக்கு அனுப்புற மாதிரி, யாரோ, அமுகவிலே போட்டிருக்காங்க. இதை அங்கே வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. நான் வேறு யாருக்கும் எழுதி அனுப்புவது இல்லை. :)

கி.அ.அ.அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails